Monday, January 9, 2012

Menmayana Kadhal

 இது ஒரு அழகான காதல் கதை.  சம்திங் சம்திங், விண்ணை   தண்டி வருவாயா
போன்ற படங்களின் வரிசையல் இதுவும் ஒரு வித்தியாசமான காதல் கதை......
கதைக்கு செல்வோமா???

கதையீன் நாயகன் பெயர் மதன்... அவன் சேலத்தில் ஒரு  தனியார் கல்லூரியல் மூன்றாம்  வருடம் BCA  படித்துக்கொண்டு இருக்கிறான்.  பரவால பாக்கறதுக்கு நல்லாத்தான்  இருப்பான். நல்ல உயரம், மாநிறம், உயரத்துக்கு ஏற்ற எடை என பாக்க சூப்பரா இருப்பான்.. சாதாரண மிடில் கிளாஸ் குடும்பம் தான். ஆனால் அவன் நிறைய நண்பர்களை சம்பாதித்து இருக்கிறான். மிகவும் கலகலப்பானவன்... எப்போதும் ஜாலியாக பேசிக்கொண்டு, சிரித்து கோண்டே இருப்பான்.  தானும் சந்தோசமாக இருக்கணும், தன்னை சுத்தி இருப்பவர்களையும் சந்தோஷ படுத்தவேண்டும் என்பதே அவன் நோக்கம். அது அவனுக்கு மிகவும் பிடித்த விசியமும் கூட. ரொம்ப பக்குவபட்டவன் போல பேசுவான். மொத்தத்தில் நல்ல பையன்.

முதல் நாள்  கல்லூரி வகுப்பிற்கு சென்றான். வகுப்பிற்குள் நுழைத்ததும் முதல் பெஞ்ச்ல 3 பொண்ணுங்க உட்காந்து இருந்தாங்க... அப்போ அவனுக்கு  தெரியாது அந்த 3  பொண்ணுங்களில் ஒருத்தி  தான் அவன் வாழ்க்கையை அழகாக்க போகிறாள் என்று அப்போது அவனுக்கு தெரியாது.

அவன் நல்லா படிக்கவும் செய்வான்...கல்லூரிக்கு போகவே பிடிக்கல மதன் கு ... ஸ்கூல்ல சின்ன பையன் போல எல்லாரையும் ராவடி பண்ணிக்கிட்டு, விளையாடிக்கிட்டு இருந்தவன திடிர்னு காலேஜ்ல தள்ளிவிடுட்டாங்க...அதுவும் அவனுக்கு பெரிய காலேஜ் ல படிக்கணும்னு ஆசை.. ஆனா இதுவோ சின்ன காலேஜ்.... இப்படி பிடிக்கமா தான் 1st நாள் கிளாஸ்க்கு போனான். அவன் உள்ள போய் 5th பென்ச்ல உட்காந்து கொண்டான்.... boys ஸ்கூல்ல படிச்சதால அவனுக்கு பொண்ணுங்க கூட பேச வராது. பசங்க கூடவே அதிகமா பேசமாட்டான். ஆனா பேச ஆரமிச்சிட நல்லா பழகுவான்.
முதல் நாள் நல்லா போச்சி கிளாஸ்.. இரண்டு பசங்க ப்ரிண்ட்ஸ் ஆய்ட்டாங்க...


 




                  

No comments:

Post a Comment